Posts

தனிமனித சீர்திருத்தமே சமுதாயத்தின் சீர்திருத்தம்

Image
இஸ்லாம் ஒரு மனிதன் புறத்தோற்றத்திலும் அகத்தோற்றத்திலும் தூய்மையாகவும் சிறந்த பண்புகளுடன் விளங்கவும் வலியுறுத்துகிறது. ஒரு மனிதன் எல்லாச் செயல்களையும் இறை திருப்தியை நாடி மட்டுமே செய்ய வேண்டும்.உலக ஆதாயம், புகழ், பாராட்டு ஆகியவற்றை நாடாமல் மனத்தூய்மையுடன் செயல்படுவதே உண்மையான சீர்திருத்தத்தின் முதல் படி ஆகும். இதில் ஆன்மீகம் முக்கிய பங்கு வகுக்கிறது.பொறாமை, பேராசை, பெருமை, கர்வம், கோபம், வெறுப்பு, கபடம் போன்ற அக நோய்களிலிருந்து உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி மாற்றாக பணிவு, தாராள குணம், அன்பு போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திகிறது.ஒருவேளை பாவம் செய்துவிட்டால் பிறகு உடனடியாக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கோரி, அந்தப் பாவத்தை மீண்டும் செய்யமாட்டேன் என்று உறுதியான முடிவெடுப்பது சீர்திருத்தத்தின் முக்கிய அம்சமாக இஸ்லாம் போதிக்கிறது. தனிமனிதச் சீர்திருத்தம் நன்னடத்தை என்பது ஆன்மீக வழிபாடுகளுடன் முடிவடைவதில்லை. அது ஒருவரது அன்றாட நடத்தையிலும் பிரதிபலிக்க வேண்டும். பேசுவதிலும், ஒப்பந்தங்களிலும் உண்மையாக இருப்பது. புறம் பேசுதல் கோள் சொல்லுதல் வீண் பேச்சு ...

சமூகத்தில் ஊறிப்போன மூட நம்பிக்கைகளும் வீண் சடங்குகளும்.

ஒருவர் செய்வதை காரணம் புரியாமல் அர்த்தமும் தெரியாமல் தானும் கடைபிடிக்கும் செயலே மூடநம்பிக்கை. superstitious எனப்படும் இந்த மூட நம்பிக்கை காலம் காலமாக மனிதர்களிடயே உலவிகொண்டுதான் இருக்கிறது.இயல்பாகவே மனிதன் கண்ணால் பார்க்க முடியாத விஷயங்களை கற்பனை செய்வதில் வல்லமை திறன் கொண்டவன். ஆதலால் இந்த மூடநம்பிக்கைகளின் சுவை அவனை நடைமுறை உண்மகளிலிருந்து ஏமாற்றிகொள்ள உதவுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. மற்றவரை ஏமாற்றவும் தன்னை தானே ஏமாற்றிகொள்ளவும்,சமூக பொறுப்புகளில் மேலோங்கவும்,அடி பாதாலத்ததிற்கு செல்லவும்,சில நேரங்களில் இந்த மூடநம்பிக்கை மனிதத்தன்மையற்ற குற்றங்கள்,கொலைகள் செய்யும் எல்லைக்கு வரை கொண்டு சென்று விடுகிறது.உதாரணத்திற்கு சமீபத்தில் நடந்த நரபலிகள்.உண்மையை சொல்லப்போனால் எல்லா மனிதர்களுக்கும் இயலாமை வரும்போது மட்டும் இனம்,மொழி,சாதி,மதம் கடந்து மூட நம்பிக்கை எனும் வழித்துணை சாதனம் தேவைப்படுகிறது.அது தாயத்தாகவோ,வண்ணக் கயிறுகளாகவோ, ஓலைச்சுவடிளில் உள்ள உளவியல் பொது கருத்தாகவோ வடிவெடுத்து விடுகிறது.இப்படியான மூட நம்பிக்கைகளை வேரறுத்த இஸ்லாமிய சமூகத்திலும் இது போன்ற நடைமுறைகளை பின்பற்ற கூட...

இறைவழிபாடும் மன ஆரோக்கியமும்.

Image
"அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலமே இதயங்கள் அமைதியடைகின்றன" (குர்ஆன் 13:28) இஸ்லாம் என்ற வார்த்தையின் மூலமே 'சமாதானம்' மற்றும் 'கீழ்ப்படிதல்' என்ற பொருளை குறிக்கிறது. இறைவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் மட்டுமே உண்மையான மன அமைதியைக் கண்டடைய முடியும் என்பதே இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம்.இஸ்லாம் மன ஆரோக்கியத்தை ஆன்மீகத்தின் ஒரு அங்கமகவே பார்க்கிறது.  மனம் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இல்லாமல் ஒருவரால் முழுமையாக இறை வழிபாடுகளில் கவனம் செலுத்த முடியாது.எனவே வழிபாட்டின் தொடக்கமாக முறைப்படுத்தப்பட்ட அம்சங்களில் முதன்மையானது ஒளு (உடல் தூய்மை). உலக சிந்தனைகளிலிருந்து மனதை விடுவித்து, இறை வழிபாட்டிற்காக மனதைத் தயார்படுத்தும் ஒரு பாலமாக ஒளு செயல்படுகிறது.  ஒளுவின் கட்டாயக் கடமையை திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது. "நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்குத் தயாரானால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்.உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக்கொள்ளுங்கள். உங்கள் கால்களை கணுக்கால் வரை கழுவிக் கொள்ளுங்...

இஸ்லாம் வலியுறுத்தும் ஜனநாயகம்.

Image
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். பின்னர் நீங்கள் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களை இனங்களாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடம் உங்களில் மிக கண்ணியமானவர், உங்களில் (அவனை) மிகவும் அஞ்சுபவர்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், உட்நோக்குபவனாகவும் இருக்கிறான்."குர்ஆன் 49:13: இந்த வசனம் மனித குலத்தின் அடிப்படை ஒற்றுமையையும், அதே சமயம் அதன் பன்முகத்தன்மையையும் வலியுறுத்துகிறது. வெவ்வேறு குழுக்களாக மனித சமூகம் இருப்பதன் காரணம் ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுகொண்டு, உறவுகளைப் பேணுவதற்குதானே தவிர நிறம், மொழி, இனம் போன்ற கூறுகள் வேறுபாடுகளை கொண்டு பெருமை கொள்வதற்காக அல்ல, மாறாக இதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் மக்கள் ஒற்றுமையோடு வாழ தகுதியான சமூக கட்டமைப்பை உருவாக்க வேண்டும். என்ற மாற்று சிந்தனையை இஸ்லாம் எடுத்துரைக்கிறது.                          முஹம்மது நபி (ஸல்) மற்றும் அவர்களின் தோழர்களின் ஆட்சிக் காலத்திலும் மதீனா மற்றும் அதன...

இணைய பாதுகாப்பும் இன்றைய இளைஞர்களும்.

Image
சமூக ஊடகங்களை இளைஞர்கள் பயன்படுத்துவதில் நன்மைகள் பல உண்டு என்றாலும் குறிப்பிடத்தக்க நெறிமுறைகளோடு அணுக வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் சமூக ஊடகம் என்பது நுணுக்கமானது மற்றும் வெளிப்படை தன்மை இல்லாத ஒன்று.எனவே தொழில்நுட்ப மாற்றத்தின் விரைவான வேகம் காரணமாக இளம் தலைமுறையினருக்கு ஏற்படும் நன்மைகளை விட,பாதிப்புகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான பல சவால்களையும் முன்வைக்கிறது. ஆகையால் நாம் நேர்மறையான அணுகுமுறைகள் மற்றும் சமூகத்தின் நல்வாழ்வில் கவனம் செலுத்தி, இதை பொறுப்புடன் அணுகுவது மிகவும் அவசியமாகிறது. 1997 மற்றும் 2012 க்கு இடையில் பிறந்த டிஜிட்டல் தலைமுறையின் சுவாரசியமான பெயர் ஜெனரேஷன் Z என்று சமூகம் குறிப்பிடுகிறது.இதற்கு பிறகு பிறந்தவர்கள் gen alpha,gen beta என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு முந்தைய தலைமுறையினரிடமிருந்து இந்த டிஜிட்டல் தலைமுறையினர் வேறுபட்டவர்கள்.இவர்கள் டிஜிட்டல் யுகத்தில் முழுமையாக மூழ்கி வளர்ந்தவர்கள்.இவர்களால் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் இல்லாமல் வாழ்க்கையை ஒருபோதும் அனுபவிக்கவோ நகர்த்தவோ முடியாது என்று கூறுவார்கள்.தகவல்களை நிதானமாக பகுப்பாய்வு ...

திறன் வழி கல்வியின் தேவை.

Image
கல்வி கற்கும் நோக்கமே நம் தனி திறனை மெருகூட்டி கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பது தான்.ஒரு காலத்தில் இலக்கிய படிப்புகள் அரசவயை அலங்கரிக்க மட்டுமே என்ற கருத்து மக்களிடம் இருந்தது.இன்று இலக்கிய துறை எழுத்து துறை,பேச்சாற்றல் மிக்கவர்கள் ஆகியோருக்கான களம் வர்த்தக ரீதியாக விரிவடைந்து விட்டது. மருத்துவ பட்ட படிப்புகள்,பொறியியல் பட்டப்படிப்புகள் போன்றவற்றுக்கு செலவுகள் அதிகரிப்பதால் அதை கற்கும் வாய்ப்பு பெரும்பான்மையான மக்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை.அப்படியே கிடைத்தாலும் பல அளவுகோல்களை கடந்து செல்வது எளிதானதாக இல்லை. பொருளாதர ரீதியான சமூக அழுத்தங்களை எதிர்கொள்ளவும், வேலைவாய்பின்றி வழிகேட்டில் செல்லும் இளம் தலைமுறையை சற்று பொறுப்போடு மாற்றுவதற்கும் இந்த திறன் வழி கல்வி இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் திறன் வழி கல்வி பயனளிக்கும் என்றாலும்,இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க இது மிகவும் அவசியாகிறது. உலக நாடுகளில் திறன்களை வளர்க்கும் கல்வித் திட்டம் பல்வேறு விதங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சில நாடுகள் தொழில் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம்...

பெண் அதிகாரம் அளித்தலின் (Women empowerment). அணுகுமுறைகள்.

Image
பெண்கள் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான உலக மாநாடுகளின் பரிந்துரைகள் பல சர்வதேச மாநாடுகள், உச்சிமாநாடுகள், கருத்தரங்குகள்,மற்றும் பெண்களுக்கான பட்டறைகள் என்று பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக உலகம் முழுவதும் பெண்களின் பிரச்சனைகள் குறித்து பேசப்படுகின்றன.என்றாலும், பெண்களுக்கான அதிகார பகிர்வு மற்றும் பெண்களின் சமூக பங்களிப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் முக்கியமானது என்று குறுக்கி அளவிட முடியாது.  அல்லது அவர்களையும் நிர்வாகங்களில் இணைத்துக் கொண்டோம் என்று பெருமை கொள்வதோடு நிறுத்திவிட முடியாது.மாறாக தற்போதுள்ள வளர்ச்சி மாதிரிகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல் சீர்திருத்த ரீதியிலான வளர்ச்சியை உருவாக்குவதும் வேண்டும். அதிகாரத்தில் உள்ள பெண்களானாலும் சரி,சுய தொழில் செய்யும் பெண்களானாலும் சரி குடும்பத்திலிருந்து சுதந்திரம் பெற்று தன்னிறைவு அடைவதை விட, குடும்ப நிர்வாகத்தில் திறம்பட செயல்பட்டு தன்னிறைவு பெறுவதே சிறப்பானது என்பதை பெண்கள் விரும்புகின்றனர். எனவே வீட்டில் குடும்ப வேலைகள் முதல் சமூகத்தின் பிற துறைகளில் கூலி மற்றும் உற்...